கொட்டும் மழைக்கு பயந்து
வண்டியை நிறுத்தி விட்டு கடையோரம் ஒதுங்கினேன்!
மழை கோட்டு அணிந்து இருந்தும் மனதில் சிந்தனை!
வேளைக்கு போகலாமா வேண்டாமா என்று!
தெரு முனை டீ கடையில் இருந்து
ஒரு சிறுவன்
சாக்கு பை போர்த்தி கொண்டு
கொட்டும் மழையில் நடந்து வந்தான்
நான் நின்ற கடைக்கு டீ கொடுப்பதற்கு!
.
.
.
.
மௌனமாய் சாலையில் இறங்கி வண்டியை நகர்த்தினேன் அலுவலகத்தை நோக்கி!
No comments:
Post a Comment